search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால் வாழை விலை வீழ்ச்சி
    X

    வரத்து அதிகரிப்பால் வாழை விலை வீழ்ச்சி

    • வரத்து அதிகரிப்பால் வாழை விலை வீழ்ச்சியடைந்துள்ள
    • வேதனையில் விவசாயிகள்

    கரூர்:

    தொடர் மழை காரணமாக, வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவில் விலை இல்லாததால் வாழை விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

    கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளான வேலாயு தம்பாளையம், புகழூர், வாங்கல், திருமுக்கூடலுார், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப் படுகிறது.

    நடப்பாண்டு கடந்த மே 24 முதல் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இது தவிர, அமராவதிஅணை, பவானி சாகர் அணை மற்றும் நொய்யல் ஆறுகளிலும் தண்ணீர் வந்ததால் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், கரூர் மாவட்டத்தில்பரவலாக மழை பெய்து வந்த தாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லை.இந்நிலையில் கடந்த, 25ல் மகாளய அமாவாசை அனுசரிக்கப் பட்டது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, வாழைத்தார்கள் கரூர் மார்கெட்டுக்கு விற் பனைக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன், 600 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்ற கற்பூர வள்ளி 450 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற பச்சைநாடன் 400 ரூபாய்க்கும் நேற்று ஏலம் போனது.

    இது குறித்து வாழை வியாபாரிகள் கூறியதாவது:

    கடந்தாண்டை விட, நடப்பாண்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கு, மாநிலம் முழுவதும் பெய்த மழை தான் காரணம். வரத்து அதிகரிப்பால், விலை எதிர்பார்த்த அளவில் உயர வில்லை. என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×