search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி
    X

    வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி

    • வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது
    • வேதனையில் விவசாயிகள்; மகிழ்ச்சியில் பொதுமக்கள்

    கரூர்:

    மகாளய அமாவாசையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சிய டைந்துள்ளது.

    கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளான வேலாயுதம்பா ளையம், புகளூர், வாங்கல், திருமுக்கூடலூர், மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாழைத்தார் சாகுபடி நடக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது தவிர, அமரா வதி, நொய்யல் ஆறுகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், வாழைத்தார் சாகுபடி அதிகரித்துள்ளது. நாளை மறுநாள் (25-ந் தேதி) மகாளய அமாவாசை அனுசரிக்கப்பட உள்ளது.

    இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, மார்க்கட்டுக்கு கூடுதலாக வாழைத்தார்கள் வரத் தொடங்கியுள்ளன.

    பூவன் பழம் ரூ. 150 முதல் 200 வரையிலும், ரஸ்தாளி ரூ. 200 முதல் 300 வரையிலும், கற்பூரவள்ளி ரூ. 150 முதல் 250 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றன.

    இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், எதிர்பார்த்த அளவில் விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் மிக குறைந்த விலைக்கு பழம் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர் என்றார்.

    Next Story
    ×