search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் விழிப்புணர்வு சுற்றுலா
    X

    கரூரில் விழிப்புணர்வு சுற்றுலா

    • உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடைபெற்றது
    • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உலக சுற்றுலா தினவிழா- 2023 முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் விழிப்புணர்வுசுற்றுலா பயணத்தை சுற்றுலாத்துறையின் மூலமாக கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து புகழிமலை சமணர்படுக்கை, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசு அருங்காட்சியகம், இராயனூர் மைசூர் போர் நினைவுதூண், திருக்காம்புலியூர் அம்மா பூங்கா மற்றும் வைகைநல்லூர் குண்டாங்கல் சமணர்சிற்பம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டது .இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தினை மாணவ, மாணவியர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அறிவு சார்ந்த நல்ல தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

    Next Story
    ×