என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
- கரூரில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றது.
- பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொணடனர்
கரூர்
கரூர் மண்மங்கலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் மண்மங்கலம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






