search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெறலாம்
    X

    'கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெறலாம்'

    • நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு
    • கலெக்டர் பிரபுசங்கர் தகவல்

    கரூர்,

    கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெற வரும், 29க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில்... பண்பாட்டுத்துறையின் கீழ், மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக, தமிழ கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பர தநாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயி லாட்டம், பாவை கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைசி லம்பாட்டம் (வீரக்கலை) ஆகிய கலைஞர்கள் விண்ணப் பிக்கலாம்.தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்ட கலைமன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள், இந்த விருதிற்கு விண் ணப்பம் செய்யக்கூடாது. மாவட்ட விருது பெற தகுதி வாய்ந்த கலைஞர்களிடமிருந்து வரும், 29க்குள், உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப் பள்ளி-6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×