என் மலர்
உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு
- டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்
- மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புகள் நடந்தன.
கரூர்:
கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதில், கலந்து கொண்ட மாணவர்களில் அருண்குமார், செந்தில்ராஜன், ராஜராஜேஸ்வர் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் முதல்நிலை 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சப்-கலெக்டர் சைபுதீன், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






