என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • கரூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    கரூர்,

    கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் உமேஷ் சாமுவேல் முன்னிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது கரூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, கரூர் பஜார் வழியாக, பேருந்து நிலையம், திண்ணப்பா திரையரங்கம் வழியாக கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமிக் கல்லூரியில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில் கணிதவியல் உதவிப்பேராசிரியர் லிவிங்ஸ்டன் (நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்) நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×