search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடக்கம்
    X

    கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடக்கம்

    • கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடங்கியது
    • கரூர் டி.எஸ்.பி. தேவராஜ் போட்டியை தொடங்கி வைத்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், கரூர் பிஎன்ஐ இணைந்து நடத்தும் அகில இந்திய அளவிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் தொடங்கியது. முதல்போட்டியில் சாய் ஸ்போர்ட்ஸ் சென்டர் சட்டீஸ்கர் அணியும், ரைசிங் ஸ்டார் சென்னை அணியும் மோதின. வீராங்கனைகளை அறிமுகத்திற்கு பின்னர் கரூர் டிஎஸ்பி தேவராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி, தலைவர் கார்த்தி, துணைத் தலைவர் குழந்தைவேல், செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், பிஎன்ஐ நிர்வாகிகள், கரூர் நகர பிரமுகர்கள், கூடைப் பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×