search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்துறை பணிகள் ஆய்வுக்கூட்டம்
    X

    வேளாண்துறை பணிகள் ஆய்வுக்கூட்டம்

    • வேளாண்துறை பணிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கரூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து பேசியபோது, சம்மந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலக்கை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் விவசாயிகள் பெரும் பயன் அடைவர். அந்த வகையில் அலுவலர்களின் பணி இருக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை. வேளாண் பொறியியல் துறை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டப் பணிகள்

    மற்றும் பாரத பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் ஆகியவைகள் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    Next Story
    ×