என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
    X

    ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை

    • அடையாளம் தெரியாத வாலிபர் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • ரெயில்வே போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், வாங்கல் அருகே நேற்று இரவு பாலக்காட்டில் இருந்து சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் லோகோ ஓட்டுநர் மலைச்சாமி ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் தலை வைத்து படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உடனடியாக ரெயிலின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனாலும் ரெயிலை நிறுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த ரெயில் தண்டவாளத்தின் மீது தலை வைத்து படுத்திருந்த அடையாளம் தெரியாத வாலிபரின் மீது சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே சிறப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இறந்த வாலிபர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் வந்தாரா, அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×