search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபருக்கு அரிவாள் வெட்டு
    X

    வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    • குளித்தலை அடுத்த சூரியனூரை சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • தாயை காப்பாற்ற சென்றதால் மகனுக்கு அரிவாள் வெட்டு காயம்

    கரூர்

    குளித்தலை அடுத்த, சூரியனுாரை சேர்ந்தவர் விஜய் (வயது 25). விவசாயி கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த பாரிவேந்தன் (32), கூலி தொழிலாளி. பாரிவேந்தன், விஜயை தகாத வார்த்தை பேசி திட்டியுள்ளார். இது குறித்து விஜய் அவருடைய தாயிடம் தெரிவித்தார்.

    இது குறித்து தட்டி கேட்க வந்த விஜய் தாயை , பாரிவேந்தன் அரிவாளால் வெட்ட முயலும் போது, அதை தடுத்த விஜயின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் விஜய்க்கு ரத்தகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விஜயை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குளித்தலை போலீசார், பாரிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×