search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் 54,535 பேருக்கு முதியோர் உதவித்தொகை
    X

    கரூரில் 54,535 பேருக்கு முதியோர் உதவித்தொகை

    • கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 535 பேர் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனர்
    • கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது,

    தமிழ்நாடு அரசு, சமுதா யத்தில் நலிவடைந்த பிரிவி னர்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஓய்வூ திய திட்டங்களைச் செய ல்படுத்தி வருகிறது. அதும ட்டுமல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் ஓய்வூதிய திட்டங்களை வழங்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்க ள் நடைமுறையில் இருக்கி ன்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி கைம்பெண்கள் ஓய்வூ தியத் திட்டம், மாற்றுத்தி றனாளிகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 10 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்த முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூக ப்பா துகாப்புத் திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட க்கூடிய உதவித்தொகையை, தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறையு டன், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமை ச்சர் முதியோர் உதவித்தொ கை உள்ளிட்ட பல்வேறு சமூகப்பாதுகாப்பு திட்டங்க ளின் வாயிலாக வழங்கப்ப ட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தொகையான 1000 ரூபாயை 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

    அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில், கரூர் வட்டத்தில் 14,759 மண்மங்க ளம் வட்டத்தில் 7,085, புகளூர் வட்டத்தில் 5469, அரவக்குறிச்சி வட்டத்தில் 7.474. கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 6,328 குளித்தலை வட்டத்தில் 9,349, கடவூர் வட்டத்தில் 4,071, என மொத்தம் 54 ஆயிரத்து 535 பயனாளிகள் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×