search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெசவாளர் முத்ரா திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    நெசவாளர் முத்ரா திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • நெசவாளர் முத்ரா திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்

    கரூர்:

    தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துணி ரகங்களின் வளாக விற்பனை முகாமினை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

    கைத்தறி துணி ரகங்களின் கண்காட்சி இரு நாட்கள் நடைபெறுகிறது.

    இக்கண்காட்சியில் கரூர் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சாதா ஜக்கார்டு பெட்ஷீட்கள், துண்டு, தலையணை உறை, பருத்தி புடவைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. எனவே, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி துணி ரகங்கள் கண்காட்சி விற்பனை முகாமில் அனைவரும் கலந்து கொண்டு கைத்தறி பொருட்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 5 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் 2.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், உதவி இயக்குநர் (கைத்தறித் துறை) அ.வே..கார்த்திகேயன், சமூக பாதுகாப்பு திட்டத் தனிதுணை ஆட்சியர் சைபுதின், கரூர் கோட்டாட்சியர் ரூபினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனார்.

    Next Story
    ×