என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது
- சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசாருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை
கரூர்.
கரூர் மாவட்டம் குளித்தலை காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வைபுதூர் புதுப்பாளை யம், மேல குட்டப்பட்டி, வாலாந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மது விற்ற கரிகாலன் (வயது 50), வீரமலை (57), இளங்கோவன் (50), ராமன் (52), செந்தில்குமார் (52) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






