என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
2 பெண்கள் மாயம்
Byமாலை மலர்19 April 2023 7:46 AM GMT
- கல்லூரி, கூலி தொழிலாளி மனைவி மாயம்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
லாலாப்பேட்டை அருகே, மேல சிந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் ஹேமலதா (வயது 21), திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமலதா, அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து, மகளை கண்டுபிடித்து தருமாறு, அசோக்குமார் லாலாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதேபோல், தோகைமலை அருகே, பாறைப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 41). இந்நிலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இதுகுறித்து வெள்ளைச்சாமி அளித்த புகாரின் படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, நாகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X