என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதிநிறுவன அதிபர் உட்பட 2 பேர் மாயம்
    X

    நிதிநிறுவன அதிபர் உட்பட 2 பேர் மாயம்

    • குளித்தலையில் ஒரே நேரத்தில் ஆண்,பெண் இருவர் மாயமாகி உள்ளனர்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 37). நிதிநிறுவன அதிபரான, இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் சரவணன் சம்பவத்தன்று தனது தொழில் விஷயமாக பணம் வசூல் செய்ய வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.இதையடுத்து மல்லிகா தனது கணவர் சரவணனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சரவணனை தேடி வருகின்றனர்.இதேபோல் குளித்தலை அடுத்த, இரணிய மங்கலம் வலையப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் வீட்டில் இருந்த ராஜேஸ்வரியை காணவில்லை என சக்திவேல் குளித்தலை போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×