search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டுவிளையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
    X

    திட்டுவிளையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

    பூதப்பாண்டி:

    தோவாளை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் திட்டுவிளையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா தலைமை தாங்கினார். தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், ஒன்றிய கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை செயலாளர் பார்வதி, பேரூர் செயலாளார் ஜான்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×