என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    ராஜாக்கமங்கலம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    • ரெஸ்லின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்
    • சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் ரெஸ்லின் (வயது 24). இவர் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ஜார்ஜ் மீன்பிடிக்க சென்றுள்ளார். அவரது மனைவி பள்ளிக்கு சென்று பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரெஸ்லின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரெஸ்லினை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரெஸ்லின் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து தாயார் பவுஸ்டி கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×