என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓணப்பண்டிகையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து வழிபாடு
- திரளான பக்தர்கள் தரிசனம்
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணப்பண்டிகை 3 நாட்கள் நடந்தது. இதையொட்டிமுதல்நாள் உத்திராடம் நட்சத்திரத்தை யொட்டி சிவப்பு நிறபட்டும் 2-வது நாள் திருவோண நட்சத்திரத்தை யொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண் பட்டும், 3-வதுநாள்அவிட்டம்நட்சத்திரத்தையொட்டி பச்சைநிறபட்டும் பகவதிஅம்மனுக்கு ஓணக் கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
விழா நாட்களில் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்ததும் பகல் 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல்மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம், போன்றவை அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்கா ரத்துடன் ஓணக் கோடி பட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடந்தது.
முன்னதாக 4.30 மணிக்கு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம் போன்றவை நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடந்தது. மதியம் உச்சிகால பூஜையும், உச்சிகால தீபாராதனையும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளசெய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம்வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் வெள்ளி சிம்மா சனத்தில் அம்மனை எழுந்த ருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்