என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மகள் மத்திய துணை ராணுவ படையில் அசாமில் வேலை பார்த்து வருகிறார்
திருவட்டார் :
குலசேகரம் அருகே உள்ள அண்டூர்புல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (வயது 53), தொழிலாளி. இவர் நேற்று மாலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கவனித்த மகன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெஸ்டஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ஜெஸ்டஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த ஜெஸ்டசின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகள் மத்திய துணை ராணுவ படையில் அசாமில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் மற்றும் மகனுடன் ஜெஸ்டஸ் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்