search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு
    X

    நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக மாக காணப்படும். ஆவணி 2-வது ஞாயிற்றுக் கிழமை யான இன்று (27-ந்தேதி) காலையில் நடை திறக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனை யும், அபி ஷேகங்களும் நடந்தது. கோவில் நடை திறக்கப் பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நாகராஜரை தரிசிக்க குடும்பத்தோடு பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகராஜரை வழி பட்டு சென்றனர்.

    நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றுவதற்கும் கூட்டம் அதிகமாக இருந் தது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நாகர் சிலை களுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். கோவிலில் கூட்டம் அலைமோதி யதை யடுத்து கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது.

    சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டம் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தரி சனத்திற்கு வந்த பக்தர் களுக்கு கோவில் கலை யரங்கத்தில் அன்ன தானம் வழங்கப்பட்டது. பக்தர்க ளுக்கு வசதியாக குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. நாகராஜா கோவில் திடலில் பக்தர்கள் விட்டுவிட்டு வந்தனர். நாகராஜா கோவில் திடலையொட்டி உள்ள சாலைகளில் சாலைகளின் இருபுறமும் திரு விழாக் கடைகள் அமைப்பட்டு இருந்தது.

    Next Story
    ×