என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் வருகையை முன்னிட்டு அவ்வையார் அம்மன் கோவில் சீரமைக்கப்படுமா?
    X

    பக்தர்கள் வருகையை முன்னிட்டு அவ்வையார் அம்மன் கோவில் சீரமைக்கப்படுமா?

    • நாளை ஆடி செவ்வாய்
    • பாதுகாப்பு பணியில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும்

    கன்னியாகுமரி :

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவிலில் பெண்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

    ஆரல்வாய்மொழி-பூதப்பாண்டி ரோட்டில் அவ்வையாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி கொழுக்கட்டை அவித்து கூழ் காட்சி வழிபாடு செய்வது வழக்கம்.

    மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது உண்டு. நாளை ஆடி செவ்வாய் என்பதால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு போதுமான கழிப்பிடம், குடிநீர் வசதிகள் இல்லை. இதனை உடனடியாக செய்துதர வேண்டும் என்று பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க பாதுகாப்பு பணியில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×