search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் 2 குழந்தைகளுடன் காதல் மனைவி மாயம் - போலீசில் கணவர் புகார்
    X

    குளச்சலில் 2 குழந்தைகளுடன் காதல் மனைவி மாயம் - போலீசில் கணவர் புகார்

    • மணக்குடியை சேர்ந்த மரிய ஜீவா (33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண்பிள்ளையும், 11 வயதில் ஆண் பிள்ளையும் உள்ளனர்.
    • 20 ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். பின்னர் 30 ம் தேதி கரை திரும்பி வீட்டிற்கு வரும்போது மனைவி, 2 பிள்ளைகளையும் காணவில்லை.

    கன்னியாகுமரி :

    சேலம் மாவட்டம் சின்னப்பன்பாடி பகுதியை சேர்ந்தவர் கமல் (வயது 36). இவர் கடந்த 2009-ல் குமரி மாவட்டம் மேல மணக்குடியை சேர்ந்த மரிய ஜீவா (33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண்பிள்ளையும், 11 வயதில் ஆண் பிள்ளையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கமல் குளச்சல் அருகே இரும்பிலி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

    வழக்கம் போல் கமல் கடந்த மாதம் 20 ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். பின்னர் 30 ம் தேதி கரை திரும்பி வீட்டிற்கு வரும்போது மனைவி, 2 பிள்ளைகளையும் காணவில்லை. மற்றும் வீட்டிலிருந்த பீரோ, துணிமணிகளையும் காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே மனைவி, பிள்ளைகளை உறவினர் வீடுகளில் சென்று தேடினார்.ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கமல் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் அவரது குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×