என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்தது ஏன்?
- இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
- வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே செங்கோடி நெடுமானூர் விளை பகுதியை சேர்ந்தவர் ஐசக் ராஜ்குமார். தனியார் ஆம்னி பஸ்சில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார்.
இவர், செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்த ஏசுஅடிமை என்பவரின் மகள் ஜினிமலர் (வயது 37) என்பவரை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஜினிமலர் அந்த பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவில் பலர் கடன் பெறுவதற்காக ஜாமீன் கையெழுத்து போட் டுள்ளார். இதை அறிந்த ஐசக் ராஜ்குமார் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்க ளுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது.
இந்த நிலையில் சம்பவத் தன்று ஐசக் ராஜ்குமார் வீட்டிற்கு வெளியே நின்ற போது, சமையலறையில் இருந்த ஜினிமலர், தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஐசக்ராஜ்குமார் ஓடி வந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார். படுகாயத்துடன் உயிருக் குப்போராடிய ஜினிமலரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ஜினிமலர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ஐசக்ராஜ்குமார், திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்