search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் கல்லூரி மாணவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது ஏன்?
    X

    ஆரல்வாய்மொழியில் கல்லூரி மாணவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது ஏன்?

    • தண்டவாளத்தில் ஷனீஸ், காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்
    • ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடியதாக நண்பர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் புன்னை நகரை சேர்ந்தவர் சகாய சிம்சன். இவரது மகன் ஷனீஸ் (வயது 26).

    இவரது தாயார் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த நிலையில் சகாய சிம்சனும் இறந்து விட்டதால், ஷனீஸ் தனது உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த ஷனீஸ், தினமும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார்.

    இந்தநிலையில் நேற்று ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஷனீஸ், காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் பாபு, பழனி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    ஷனீஸின் மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தின் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே ஷனீஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஷனீஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தாரா?

    மாணவர் ஷனீஸ் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஷனீஸ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடியதாக நண்பர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    எனவே இந்த விளை யாட்டில் ஷனீஸ் அதிக பணத்தை இழந்திருக்கலாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்திருக்க லாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×