search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
    X

    தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

    • கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
    • மாநில தலைவர் ராஜேந்திரன் அரசுக்கு கோரிக்கை

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    குமரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் மோகன், இணை செயலாளர் மது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் நாகேஸ்வர காந்த் வரவேற்று பேசினார்.

    மாநில பொதுச் செயலா ளர் சுரேஷ் விளக்கவுரை ஆற்றினார். பொருளாளர் முத்துச்செல்வன், செய லாளர் விஸ்வநாதன், துணை தேர்தல் ஆணையர் விஜய பாஸ்கர், சங்க ஆலோ சனை குழு உறுப்பினர் குமார், ஜீவரத்தினம் சசி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    முன்னதாக மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள 800- க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×