search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் தேர் திருவிழா
    X

    உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் தேர் திருவிழா

    • 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண தேர் வீதி உலா 27-ந் தேதி நடக்கிறது

    கன்னியாகுமரி :

    என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு பகுதியில் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆனி மாத செம்ப வள பஞ்சவர்ண தேர் திருவிழா நாளை மறுநாள் (17-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 27-ந் தேதி (திங்கள்கிழமை) வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    முதல் நாள் காலை மங்கல இசை, பணிவிடை, உகப்படிப்பு ஆகியவற்றை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க திருக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. 7 மணிக்கு அன்னதர்மமும், 8 மணிக்கு கோலப்போட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோலப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அப்டா மார்க்கெட் தலை வர் பால்ராஜ் பரிசு கள் வழங்குகிறார். இரவு 7 மணிக்கு இனிமம் வழங்கு தலும் 8.30 மணிக்கு சிறுவர்- சிறுமியருக்கான கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

    தொடர்ந்து தினமும் சிறப்பு தீபாராதனைகள், வழிபாடுகள், அய்யா பவனி வருதல் போன்றவை நடக்கின்றன.5-ம் திருநாள் இரவு 8 மணிக்கு முகிலன்விளை பிரம்மசக்தி அம்மன் பஜனை குழுவினர் வழங்கும் மாபெரும் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    7-ம் நாள் திருவிழா நாள் இரவு 8 மணிக்கு அய்யாவின் அருளிசை புலவர் ஸ்ரீ குரு ஜி. என்.சிவச்சந்திரன் ஆன்மீக அருளிசை கச்சேரியும் நடைபெறுகிறது.

    9-ம் திருவிழா நாளில் இதுவும் நியாயம்தானா? எனும் சமூக நாடகம் நடை பெறுகிறது.

    10-ம் திருவிழா நாள் இரவு 8 மணிக்கு விஜய் டி.வி சூப்பர் சிங்கர் முபிதாவுடன் இணைந்து திரைப்பட பின்னணி பாடகி விஜிதா சுரேசாமின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சிநடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண தேர் வீதி உலா 27-ந் தேதி (திங்கட் கிழமை) நடக்கிறது. மாலை 3 மணிக்கு ஆஞ்சநேயர் தேர் முன்னே செல்ல தெய்வத்திரு டாக்டர் எஸ்.லெட்சுமணனால் ஆரம்பிக்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    செம்பவள பஞ்சவர்ண தேர் பவனியின்போது மோர் தர்மம், பழத்தர்மமும், கோயில் விளை சந்திப்பில் வைத்து அன்னதர்மமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தேர் கோவில் முன் வந்து சேரும்.

    இரவு 2 மணிக்கு கொடி யிறக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.

    தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன், உப தலைவர் சந்திரசேகர், செயலாளர் துரைச்சாமி, இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் உதயகுமார், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணமணி நாராயணப்பெருமாள், மணிகண்டன், ஸ்ரீதர், நாராயண மணி, ராஜேஸ்வரன், சுரேந்திரன் தங்கலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×