search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பளுகல் அருகே இருதரப்பினர் மோதல்
    X

    பளுகல் அருகே இருதரப்பினர் மோதல்

    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே உள்ள பருசுவைக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 33). இவருக்கும் மனைவிக்கும் குடும்ப பிரச்சனை இருந்தது. இதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அனீஷ்மோன்(26) தலையிட்டதால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் நேற்று அனீஷ்மோன் இரும்பு கம்பியால் தாக்கியதோடு இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக சதீஷ்குமார் பளுகல் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதேபோல் சதீஷ்குமார் தாக்கியதில் பலத்த காயமடைந்து பறசாலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசில் அனீஷ்மோன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார்களின் அடிப்படையில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×