என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் இன்று 2-வது நாளாக அண்ணாமலை பாதயாத்திரை
- தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது
- கையில் கட்சிக்கொடியுடன் தொண்டர்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் :
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் பாதயாத்திரையை நிறைவு செய்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். சாமியார் மடத்திலிருந்து தனது பாதயாத்திரையை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கினார். தொண்டர்கள் புடைசூழ அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.காட்டாத்துறையில் அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த பாரத மாதா சிலைக்கும் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.
பாதயாத்திரையில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. கையில் கட்சிக்கொடியுடன் தொண்டர்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
பாதயாத்திரையின் போது இளம்பெண்கள், சிறுவர், சிறுமிகள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். மணலி சந்திப்பில் இன்று மதியம் தனது பாதயாத்திரை நிறைவு செய்தார்.
பாதயாத்திரையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டதையடுத்து தக்கலை சாமியார்மடம் சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. இன்று மாலையில் குளச்சல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
நாளை (18-ந்தேதி) காலை நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பார்வதிபுரம் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை வேப்பமூடு காமராஜர் சிலை முன்பு நிறைவு செய்கிறார். நாளை மதியம் கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி கொட்டாரத்தில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்