search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம்
    X

    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம்

    • சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி தீபாராதனை, சிறப்பு பூஜைகள், சுவாமி வாகனத்தில் வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    8-ம் நாளான இன்று (2-ந் தேதி) காலை 5 மணிக்கு சிறப்பு பூஜை, 7 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதிஉலா, 8 மணிக்கு கலச பூஜை, அபிஷேபகம், பகல் 12 மணிக்கு உச்சகால பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    9-ம் திருவிழாவான நாளை (3-ந் தேதி) காலை 9.05 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளிச் செய்து தேர் திருவிழா நடைபெறுகிறது. அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு தொடங்கி வைக்கின்றனர். நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×