search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம் விஜய்வசந்த் எம்.பி. மனு
    X

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம் விஜய்வசந்த் எம்.பி. மனு

    • வருகின்ற பருவமழை காலத்திற்கு முன்பாக அந்த பணிகளை முடித்தால் மீனவ மக்களுக்கு மிக பாதுகாப்பாக அது அமையும்
    • மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுவதை தடுப்பதற்கு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுக விரிவாக்க பணிகள் உட்பட பல்வேறு கோரிக்கை குறித்து முதல் வரை சந்தித்து குமரி மாவட்ட மக்கள் சார்பாக. விஜய்வசந்த் எம்.பி மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் துறைமுக விரிவாக்க பணிகள் நடந்து வருவதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வருகின்ற பருவமழை காலத்திற்கு முன்பாக அந்த பணிகளை முடித் தால் மீனவ மக்களுக்கு மிக பாதுகாப்பாக அது அமையும். அதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுவதை தடுப்பதற்கு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்.

    குமரிமாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் விடுவதற்கு கேரள அரசுடன் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும்.

    வனத்துறை சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து ரப்பர் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ரப்பர் மரங்களை வெட்டி மாற்றுவதற்கு கேரள அரசு கொண்டு வந்ததுபோல் சட்ட திருத்தம் வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள சிறார்களும், இளைஞர்களும் விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமையை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு அரங்கம் தேவை. மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் ஒரு தொழில்நுட்ப பூங்கா அமைத்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×