search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியை நெருங்குகிறது
    X

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியை நெருங்குகிறது

    • திற்பரப்பு அருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீடிப்பு
    • விளவங்கோடு தாலு காவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் சேத மடைந் துள்ளன.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வருகின்றன. தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி வந்த நிலையில் அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் குறைந்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப் படியாக குறைய தொடங்கி யுள்ளது. திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்ப தற்கு இன்று 8-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ள நிலையில் நேற்று மேலும் 9 வீடுகள் இடிந்து உள்ளது.

    விளவங்கோடு தாலு காவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் சேத மடைந் துள்ளன.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளை பொதுப்பணித்துறை அதி காரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வரு கிறார்கள். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.79 அடி யாக உள்ளது. அணைக்கு 1104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 228 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணை யின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 40 அடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ளது. அணைக்கு 841 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 15.78 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 15.87 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்ப ழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 50.94 அடியா கவும் உள்ளது. நாகர்கோ வில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை 21.40 அடியாக உள்ளது.

    Next Story
    ×