என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடசேரி பஸ் நிலையத்தில் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகளின் ஓய்வு அறை இடித்து அகற்றம்
- ஆண், பெண்களுக்கு என தனித்தனியே ஓய்வறை இருந்தது.
- ஒரு சில பயணிகள் மட்டுமே இந்த ஓய்வு அறையை பயன்படுத்தி வந்தனர்
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் ரூ.6 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் மிக மோசமான நிலையில் காணப்பட்டது. அந்த இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய இருக்கைகள் அமைக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களை சீரமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்லும் பிளாட்பாரங்கள் சீர மைக்கும் பணி நடை பெற்றது.
பிளாட்பாரத்தில் உள்ள தரைகள் அகற்றப்பட்டு புதிய தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரம் புத்தம் புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது. தற்பொ ழுது பஸ் நிலையத்தின் நடுவில் உள்ள பிளாட்பா ரத்தை சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இந்த பிளாட்பாரத்தின் தரைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. இந்த பிளாட்பாரத்தில் தான் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏசி ஓய்வறை ஒன்று இருந்தது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியே ஓய்வறை இருந்தது.
இந்த ஓய்வறையில் கடந்த சில நாட்களாகவே குளிர்சாதன வசதி செயல்படாமல் இருந்தது. ஒரு சில பயணிகள் மட்டுமே இந்த ஓய்வு அறையை பயன்படுத்தி வந்தனர். இதனால் போதிய பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்தது. பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையடுத்து ஓய்வறையை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பிளாட்பாரத்தில் இருந்த பயணிகளின் ஓய்வு அறை அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பிளாட்பாரத்தில் உள்ள தரைகளை அகற்றும் பணி இன்று காலை நடந்தது. இந்த பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவ டைந்ததும் கன்னியாகுமரிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் பிளாட்பா ரத்தின் வேலையை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நாகர்கோவில் பஸ் நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே அந்த ஓய்வ றையை மாற்றும்போது இட வசதி அதிகமாக கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தற்போது ஓய்வுஅறை அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
பயணிகள் கூறுகையில், பஸ் நிலையத்தில் பயணி களுக்கு வசதியாக ஓய்வு அறை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்