search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டை காலி செய்யுமாறு கூறிய தொழிலதிபருக்கு அடி-உதை
    X

    வீட்டை காலி செய்யுமாறு கூறிய தொழிலதிபருக்கு அடி-உதை

    • பெண் உள்பட 3பேர் மீது வழக்கு
    • 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள தச்சன்பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயசேகர்(வயது 42). வாகனம் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா(38). இவர்களுக்கு சொந்தமான வீட்டில் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு தச்சன்பரம்பை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் வாடகைக்கு குடி யிருந்தனர்.

    வாடகை சரியாக கொடுக்காததால் அவர்களை ஜெயசேகர் தம்பதியர் காலி செய்ய கூறிவிட்டனர். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜெயசேகர் அவரது மனைவி ஜீவா இருவரும் தச்சன்பரம் பில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஜெயக்குமார் அவரது மனைவி சங்கீதா மற்றும் பிரசாத் ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கம்பியால் ஜெயசேகரை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஜெயசேகருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. தடுக்கவந்த ஜீவாவையும் கையால் தாக்கிய அவர்கள், ஜெயசேகர் பாக்கெட்டில் இருந்த ரூ.2ஆயிரத்தையும் எடுத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ள னர்.

    பலத்த காயமடைந்த ஜெயசேகர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். காயம் அடைந்த ஜீவா குளச்சல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ஜெயசேகர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக் குமார், சங்கீதா உட்பட 3 பேர் மீதும் இரணியல் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×