search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல நாளை மறுநாள் தடை தொடங்குகிறது
    X

    குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல நாளை மறுநாள் தடை தொடங்குகிறது

    • கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.
    • போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்களின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி ;

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்பட குகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது.

    குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. ஒரு விசைப்ப டகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட் களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

    இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் ஜூன் 1-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் தடைக்காலம் தொடங்குகிறது. இதை யொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளன. பெரும்பான்மை யான விசைப்படகுகள் கரை திரும்பி விட்டன.

    கடந்த 3 நாட்களாக மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. அவை மீன் பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்த்து, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வர். மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாது. ஆனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க செல்லும். இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்களின் விலை உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர

    Next Story
    ×