குமரி மாவட்ட கோவில்களில் கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்

இணை ஆணையர் உத்தரவுபத்மநாபபுரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த், பூதப்பாண்டி தொகுதி கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட கோவில்களில் கண்காணிப்பாளர்கள் அதிரடி மாற்றம்
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கண்காணிப்பாளர்களை அதிரடியாக இட மாற்றம் செய்து ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாள ராகபணியாற்றிய ஆனந்த், நாகர்கோவில் தேவசம் தொகுதி மற்றும் பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாள ராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப் பில் இருந்த சிவக்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடு விக்கப்படுகிறார். பத்மநாபபுரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த், பூதப்பாண்டி தொகுதி கண்கா ணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூதப் பாண்டி தொகுதியில் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ஆறுமுக நயினார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக் கப்படுகிறார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com