என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் படுகாயம்
- மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- மாணவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை திவண்டாக்கோட்டையை சேர்ந்தவர் ரெத்னகுமார்.
இவரது மகன் டெனி (வயது 19). 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பொறி யியல் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்துள் ளார்.
சம்பவத்தன்று டெனி தனது மோட்டார் சைக்கி ளில் மணவாளக்குறிச்சி - நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். பின்னால் அதே பகுதி யைச் சேர்ந்த ஆசீர் அமர்ந்திருந்தார்.
மோட்டார் சைக்கிள் வெள்ளமோடி பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது அங்கு குறுக்கே சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிள் டெனி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயமடைந்த டெனி அருகில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்