search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு
    X

    பகவதி அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு

    • 28-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
    • கன்னியாகுமரியில் ஓணப்பண்டிகையை முன்னிட்டு நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ஓணம் பண்டிகை வருகிற 28-ந்தேதி முதல்30-ந்தேதி வரை3நாட்கள்நடக்கிறது.வருகிற 28-ந்தேதி உத்தி ராடம் நட்சத்திரத்தை யொட்டி பச்சை நிறப்பட்டும், 29-ந்தேதி திருவோண நட்சத்திரத்தை யொட்டி கேரளபாரம்பரிய உடையான வெண்பட்டும், 30-ந்தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்புநிற பட்டும் பகவதி அம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    இந்த 3 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அபிஷேகம் முடிந்ததும் பகல் 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம் போன்றவை அணி விக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடிபட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடக்கிறது. மதியம் உச்சி கால பூஜையும் உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை யும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச்செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைதொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் மற்றும் அறங்கா வலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×