search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைப்படகு மீது கப்பல் மோதல் - மாலத்தீவில் உள்ள 12 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    விசைப்படகு மீது கப்பல் மோதல் - மாலத்தீவில் உள்ள 12 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு
    • மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் தங்க வைத்தனர்.

    நாகர்கோவில் :

    தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பைஜு. இவருக்கு சொந்த மான விசைப்படகில் கடந்த 7-ந்தேதி இரவிபுத்தன் துறை, தூத்தூர் மற்றும் கேரள மாநிலம் விழிஞ்சம், பாண்டிச்சேரி, அசாம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மீன்பிடித்து விட்டு இவர்கள் தேங்காய்பட்டி னம் துறைமுகத்திற்கு திரும்பிக்கொண்டி ருந்தனர். நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்த போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்ற இழுவை கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது. பின்னர் அந்த கப்பல் நிற்காமல் சென்று விட்டது. கப்பல் மோதியதில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த 12 மீனவர்களும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    கடலில் நீந்தியப்படியே உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் தங்க வைத்தனர். இது குறித்து குமரி மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீனவர்களை மீட்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தலைமையின் பொதுச்செய லாளர் சர்ச்சில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்தநிலையில் மீன வர்கள் குடும்பத்தினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், மாலத்தீவில் தவிக்கும் 12 மீனவர்களையும் உடனடி யாக மீட்டு கொண்டு வர வேண்டும். சேதமடைந்த விசை படகிற்கு உரிய நிவாரணமும், மீனவர்க ளுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும். விசை படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கப்பல் மீது அரசு உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×