search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே அனுமதியின்றி செம்மண் திருடிய மினி வேன் பறிமுதல்
    X

    களியக்காவிளை அருகே அனுமதியின்றி செம்மண் திருடிய மினி வேன் பறிமுதல்

    • சோதனை செய்த போது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள குழித்துறை ஆத்து க்கடவு பகுதியில் அனுமதி இல்லாமல் மினி வேனில் செம்மண் கடத்தப்படுவதாக களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் இன்று சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சந்தேகமடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்த போது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    எந்தஅனுமதியும் இல்லா மல் செம்மண் கடத்து வதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து வேனையும் செம்மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.செம்மண் கடத்தியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×