என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களியக்காவிளை அருகே அனுமதியின்றி செம்மண் திருடிய மினி வேன் பறிமுதல்
Byமாலை மலர்15 Jun 2022 9:33 AM GMT
- சோதனை செய்த போது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது
- டிரைவர் தப்பி ஓட்டம்
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே உள்ள குழித்துறை ஆத்து க்கடவு பகுதியில் அனுமதி இல்லாமல் மினி வேனில் செம்மண் கடத்தப்படுவதாக களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் இன்று சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சந்தேகமடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்த போது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
எந்தஅனுமதியும் இல்லா மல் செம்மண் கடத்து வதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து வேனையும் செம்மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.செம்மண் கடத்தியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X