search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
    X

    குழித்துறையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

    • 97-வது வாவுபலி பொருட்காட்சி நாளை (13-ஆம் தேதி) தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    குழித்துறை சந்திப்பிலிருந்து குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு -தாலுகா அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படுகின்ற 97-வது வாவுபலி பொருட்காட்சி நாளை (13-ஆம் தேதி) தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது. அப்போது அப்பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சென்றுவர கடும் அவதிக்குள்ளாக நேரிடும். எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×