search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட டெம்போ 

    திருவட்டார் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்

    • போலீசை கண்டதும் டெம்போ டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குமரன்குடியில் இருந்து செம்மன் கடத்தப்படுவதாக திருவட்டார் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருவட்டார் தாசில்தார் குமரன்குடி கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அதிரடியாக அந்த பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது செங்கோடி அருகே காரியமங்கலத்துவிளை பகுதியில் டெம்போவில் சிலர் செம்மண் ஏற்றிகொண்டு இருந்தார்கள்.

    போலீசை கண்டதும் டெம்போ டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். கிராம நிர்வாக அதிகாரி ஜெகன் அருள் டெம்போவை கைப்பற்றி திருவட்டார் போலீசில் ஒப்படைத்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×