search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் ஆகஸ்டு 21-ந் தேதி முதல் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு - வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்
    X

    நாகர்கோவிலில் ஆகஸ்டு 21-ந் தேதி முதல் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு - வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்

    • நாகர்கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்த ஆட்சேர்ப்பு முகாம்
    • தேர்வு முகாமில் 17 அரை முதல் 23 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 21-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை நடக்கிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    திருச்சியில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த தேர்வு முகாமில் 17 அரை முதல் 23 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். 10 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இதில் கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    ஊதியம், படிகள் மற்றும் இத்துடன் கிடைக்கப்பெறும் நிதியுதவிகள், உடல் தகுதிகள், மருத்துவ தேர்வு போன்ற கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை முழுமையாக பார்வையிட்டு அதில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ள மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதனை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×