என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை அருகே பஸ்சில் தவறவிட்ட 1¼ பவுன் பிரேஸ்லெட் மீட்பு
    X

    குழித்துறை அருகே பஸ்சில் தவறவிட்ட 1¼ பவுன் பிரேஸ்லெட் மீட்பு

    • போக்குவரத்து கழக அதிகாரிகள் பெண்ணிடம் வழங்கினர்
    • பிரேஸ்லெட்டை வழங்கிய கண்டக்டருக்கு பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நாகர்கோவில் :

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 35). இவர் குமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தனது தாயாரை பார்ப்பதற்காக நேற்று இரவு பஸ்சில் புறப்பட்டு நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தார். இன்று காலை வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்சில் குழித்துறைக்கு சென்றார்.

    பஸ்சை விட்டு இறங்கி பூர்ணிமா பார்த்தபோது தனது கையில் கிடந்த 1¼ பவுன் பிரேஸ்லெட்டை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணிமா அந்த பகுதியில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்தார்.

    அவரிடம் இருந்து டிக்கெட்டை பரிசோதித்த அதிகாரிகள் அவர் சென்ற பஸ்சை கண்டுபிடித்தனர். உடனடியாக பஸ் கண்டக்டரை தொடர்பு கொண்டு போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசினார்கள். அப்போது கண்டக்டர்கள் பஸ்சில் கிடந்த பிரேஸ்லெட்டை எடுத்து வைத்திருப்பதாக கூறினார்கள். இதற்கிடையில் திருவனந்தபுரத்திற்கு சென்ற பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பஸ் நிலையம் வந்ததும் கண்டக்டர்கள் முத்துராஜன் போக்குவரத்து கழக அதிகாரியிடம் பிரேஸ்லெட்டை ஒப்படைத்தார். போக்குவரத்து கழக அதிகாரிகள் பூர்ணிமாவிடம் பிரேஸ்லெட்டை ஒப்படைத்தனர். பிரேஸ்லெட்டை வழங்கிய கண்டக்டருக்கு பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    Next Story
    ×