search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் தி.மு.க.வினர் பேரணி
    X

    5-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் தி.மு.க.வினர் பேரணி

    • கருணாநிதி சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை
    • கட்சியினர் திரளாக பங்கேற்பு

    நாகர்கோவில் :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் இன்று அமைதி பேரணி நடந்தது. பேரணிக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    வடசேரி அண்ணா சிலை முன்பிருந்து தொடங்கிய அமைதி பேரணி, மணிமேடை சந்திப்பு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, அரசமூடு சந்திப்பு, கட்டபொம்மன் சந்திப்பு வழியாக ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகம் வந்தது.பேரணியில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்ட வாகனம் முன் செல்ல நிர்வாகிகள் திரளாக பின் தொடர்ந்து வந்தனர்.

    இதைத் தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணா நிதி உருவப்படத் திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத் தப்பட்டது. பேரணியில் மாநில மகளிரணி செயலா ளர் ஹெலன்டேவிட்சன் முன்னாள் அமைச்சர் சுரே ஷ்ராஜன், பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் நசரேத் பசலியான், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செய லாளர் தில்லைசெல்வம், துணை மேயர் மேரிபிரின்சி லதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, சதாசிவம், அணி அமைப்பாளர்கள் அகஸ்தீ சன், இ.என். சங்கர், அருண் காந்த், சி.என்.செல்வன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகில வாணி, ஒன்றிய செயலாளர் கள் பாபு, சுரேந்திர குமார், மதியழகன், செல்வன், பிராங்ளின், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமை ப்பாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பலரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மற்றவர்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். கருணாநிதி நினைவு நாளையொட்டி நாகர்கோவில் பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    Next Story
    ×