search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் ரெயில்வே டிரைவர்கள் போராட்டம்
    X

    நாகர்கோவிலில் ரெயில்வே டிரைவர்கள் போராட்டம்

    • புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
    • தென்மண்டல இணை செயலாளர் பிரதீப், ரெயில் ஓட்டுனர்கள் செல்வகுமாரி, சுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    நாகர்கோவில் :

    ரெயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்குவதை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே துறை உள்ள காலிப்பணியிடங்களை‌ நிரப்புதல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஊதியத்திற்கு ஏற்ப இரவு நேரப்படி பணி அலவன்ஸ் வழங்குதல், வார ஓய்வு லோக்கோ பைலட்டுகளுக்கும் வழங்க வேண்டும்.

    பெண் ரெயில் டிரைவர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லோக்கோ ஓடும் தொழிலாளர் கழகம் சார்பில் ரெயில் ஓட்டுனர்கள் மற்றும் உதவி லோக்கோ பைலட்டுகளின் ஒருநாள் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

    அதன்படி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கிளை தலைவர் காந்தி தலைமை தாங்கினார். தென்மண்டல செயற்குழு உறுப்பினர் நாகராஜன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    தென்மண்டல இணை செயலாளர் பிரதீப், ரெயில் ஓட்டுனர்கள் செல்வகுமாரி, சுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×