என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்
    X

    கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்

    • பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்
    • அரசு விதிகளுக்கு உட்பட்டு தீர்வுகள் எட்டப்படும்

    கன்னியாகுமரி :

    கல்லுக்கூட்டம் பேரூராட்சி 18-வது வார்டு பகுதியான கொட்டில்பாடு கிராமத்தின் ஒனாரிஸ் காலனி மற்றும் நவஜீவன் காலனி பகுதியில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பகுதி மக்களின் குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

    நிகழ்வில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மனோகர் சிங், செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் வார்டு கவுன்சிலர் முன்னிலையில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்.விரைவில் அரசு விதிகளுக்கு உட்பட்டு தீர்வுகள் எட்டப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மன்ற தலைவர் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் கொட்டில்பாடு பங்குதந்தை ராஜ், சமூக ஆர்வலர் குமார சுதன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×