search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல் நீடிப்பு
    X

    கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல் நீடிப்பு

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் சிக்கல்
    • நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படு கிறது.

    குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரி யில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனை யொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு வசதி யாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 26-ந்தேதி நடந்த கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பு உள்ள இடத்தில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தற்காலிக சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான கவுன்சி லர்கள் ஆதரவு அளிக்க வில்லை. இதனால் இந்த கூட்டத்தில் சபரிமலை சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்ப டவில்லை. இதனால் தற்போது கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கு வதற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பி னும் இந்த சீசன் கடைகளை ஏலம் எடுப்ப தற்காக இப்போதே வெளியூர் வியா பாரிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். ஆனால் வெளியூர் வியாபாரி களின் நிலை கேள்விக்குறி யாக தான் உள்ளது.

    Next Story
    ×