search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே மத போதகர் மாயம்
    X

    கோப்பு படம் 

    திருவட்டார் அருகே மத போதகர் மாயம்

    • திருவட்டார் போலீசார் விசாரணை
    • தெரிந்தவர் ஒருவரை மார்த்தாண்டம் சென்று பார்த்து வருவதாக தன் மனைவியிடம் கூறிச்சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே பள்ளிகுழிவிளை பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டராக ஜோண் குட்டி (வயது 62) செயல்பட்டு வருகிறார்.

    நேற்று மாலை தனக்கு தெரிந்தவர் ஒருவரை மார்த்தாண்டம் சென்று பார்த்து வருவதாக தன் மனைவி யிடம் கூறிச்சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது.

    மார்த்தாண்டம் பகுதியில் சென்று பார்த்தபோதும், பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தேடி பார்த்த போதும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் ஷெரின்ஜோண் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்.

    Next Story
    ×