search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-வது முறையாக சாதனை நடைபயணத்தை தொடங்கிய ஏழை வாலிபர்
    X

    4-வது முறையாக சாதனை நடைபயணத்தை தொடங்கிய ஏழை வாலிபர்

    • கன்னியாகுமரியில் இருந்து நேபாளம் வரை நடக்கிறார்
    • பைக், பணம் இருந்தால் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா?

    கன்னியாகுமரி:

    நாகர்கோயில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி நிஷாந்த்.இவர் கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் லடாக் வரை நடைபயணம் மூலமாக சென்று 3 உலக சாதனை புத்தகம் மற்றும் பல சாதனைகளில் இடம் பிடித்து உள்ளார்.

    இந்த முறை புதியதாக சாதனை படைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடைபயணம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து உள்ளார்.

    அதன்படி அவர் தனது நடைபயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து நேற்று தொடங்கினார். காந்தி வடிவில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தனா திரில்லாபூர் காந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் நாகேந்திரன் ஆகியோர் அவரது நடை பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    பைக், பணம் இருந்தால் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா ஒரு ஏழை நினைத்தால் அவனது தன்னம்பிக்கையால் நடந்தே சாதிக்கலாம் என்று ஏழை மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடந்து பயணம் செய்கிறேன். என்று அவர் கூறினார்.

    இந்த பயனத்தை தொடக்கி வைத்த முத்தனா திரில்லாபூர் காந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் நாகேந்திரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×